jeudi 7 décembre 2017

தற்போதைய திருப்பணி நிலவரம்


எமது   மருதங்கேணிக்   கந்தசாமியார்  ஆலயத்தின்  திருப்பணி
வேலைகள்  தொடர்ந்து  ‌நடைபெற்றுக்கொண்டு   இருக்கின்றன.  இதில்  மூலஸ்த்தானத்தில்   இருந்து  ஆறுமண்டபங்கள்,   மூலஸ்த்தானத்தின் பண்டிகை   ‌வேலைகள்,  மற்றும்  வசந்தமண்டபம் ,  பிள்ளையார்  கோவில்,   வையிரவர்  கோவில் யாகசாலை ,  மணிக்கூட்டுக்கோபுரம்,   தீர்த்தக்கிணறு அடியார்கள்கிணறு,  உள்ச்சுற்றுமதில்,   ஆகிய வேலைகள்   யாவும்   நிறைவடைந்து  விட்டது.  மடப்பளியும்,  களஞ்சியமும்  கட்டப்பட்டுக்   கொண்டு இருக்கிறது.    தொடர்ந்து   நிலம்   போடுதல்    வேலைகள்   ஆரம்பமாகின்றது   என்பதை  இக்கோவில் சம்பந்தப்பட்டவர்கட்கு திருப்பணிசார்பாக    அறியத்தருகின்றோம்.